மார்ச் 16ம் தேதி முதல் திரையரங்குகளை மூடி போராட்டம்-திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்
சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற 🎥திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில், திரையரங்கக் 💸கட்டணத்திற்கு விதிக்கப்படும் உள்ளாட்சி வரி 8 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திரையரங்க உரிமம் புதுப்பிக்கும் முறையை நடைமுறைப் படுத்த வேண்டும்😯 என்பன உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன👍. இது குறித்து, முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து தங்களது 🙏கோரிக்கைகளை எடுத்துரைக்கப் போவதாகவும், அதில் எந்தத் தீர்வும் ஏற்படாவிட்டால் வரும் 📆16 ஆம் தேதி காலவரையின்றி திரையரங்கங்களை மூடிப் போராட்டத்தில் ஈடுபட😟 முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் 🎥திரைப்பட உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்🔈 என்பது குறிப்பிடத்தக்கது😳.
COMMENTS